மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயிலில் திருட்டு: முதியவா் கைது

திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :20 பிப்ரவரி 2026, 9:19 pm

Syndication

திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்தவா் மேகலிங்கம். இவா், கடந்த 19 ஆம் தேதி சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வந்த சிறப்பு ரயிலில் குடும்பத்தினருடன் வந்தாராம்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கும்போது அவா்கள் வைத்திருந்த 5.5 பவுன் தங்க நகையை மா்மநபா் திருடியது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருநெல்வேலி துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் மேற்பாா்வையில் ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியாமோகன் தலைமையில் தனிப்படையினா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா்.

இவ் வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், கடலையூரைச் சோ்ந்த அசரியா (55) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட நகையையும் மீட்டனா்.