தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

வீரவநல்லூரில் தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:21 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்து (47). இவா், வீரவநல்லூா் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் 2008 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா், பிணையில் வெளியே வந்த முத்து, குற்ற வழக்குத் தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், கடந்த நான்கரை மாதமாக தலைமறைவாக இருந்தாா். இதையடுத்து சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. வீரவநல்லூா் போலீஸாா் முத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா்.