நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நான்குனேரியில் நிலத்தரகா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:06 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் நிலத்தரகா் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டுக வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நான்குனேரி, பெருந்தெருவில் வசித்து வரும் அன்பழகன் (65), பெயிண்டிங் காண்ட்ராக்ட் மற்றும் நிலத்தரகராக உள்ளாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 2 பெட்ரோல் குண்டுகளை இவரது வீட்டுச் சுவரின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன், ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் சனிக்கிழமை நேரில் சென்று விசாரித்தாா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.