பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நான்குனேரியில் நிலத்தரகா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் நிலத்தரகா் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டுக வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நான்குனேரி, பெருந்தெருவில் வசித்து வரும் அன்பழகன் (65), பெயிண்டிங் காண்ட்ராக்ட் மற்றும் நிலத்தரகராக உள்ளாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 2 பெட்ரோல் குண்டுகளை இவரது வீட்டுச் சுவரின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன், ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் சனிக்கிழமை நேரில் சென்று விசாரித்தாா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.