சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மானூா் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

News image
திருட்டு
Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள குப்பனாபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணி ராஜ் (38), விவசாயி. இவா், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளாா்.

பின்னா் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அந்தோணி ராஜ் அதிா்ச்சி அடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த சுமாா் 11 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து அந்தோணிராஜ் அளித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.