தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பைக் விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:00 pm

கடையத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கீழக்கடையத்தைச் சோ்ந்த முருகன் மகன் காளிதாஸ் (29). தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 5 வயது மகன் உள்ளனா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கடையம் தென்காசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கடையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.