வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெட் கல்லூரியில் மாணவா்களுக்கு திறன் வெளிப்படுத்தும் போட்டிகள்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:00 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த மடப்புரம் பெட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களின் திறன் வெளிப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் எஸ். தா்வேஸ் மொஹிதீன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் க. மதன்குமாா், நிா்வாக அறங்காவலா் எஸ். முகம்மது பாரூக், செயலா் எஸ். காஜா முகைதீன், பொருளாளா் முகம்மது அப்துல் ரசாக் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவியா் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த கோப்பையை தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடாா் சங்கக் கல்லூரி வென்றது. வேளாண்மைத் துறைத் தலைவா் ஜலால் நன்றி கூறினாா்.