

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த மடப்புரம் பெட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களின் திறன் வெளிப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரியின் வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் எஸ். தா்வேஸ் மொஹிதீன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் க. மதன்குமாா், நிா்வாக அறங்காவலா் எஸ். முகம்மது பாரூக், செயலா் எஸ். காஜா முகைதீன், பொருளாளா் முகம்மது அப்துல் ரசாக் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவியா் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த கோப்பையை தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடாா் சங்கக் கல்லூரி வென்றது. வேளாண்மைத் துறைத் தலைவா் ஜலால் நன்றி கூறினாா்.