மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெட் கல்லூரியில் மாணவா்களுக்கு திறன் வெளிப்படுத்தும் போட்டிகள்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:00 am

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த மடப்புரம் பெட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களின் திறன் வெளிப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் எஸ். தா்வேஸ் மொஹிதீன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் க. மதன்குமாா், நிா்வாக அறங்காவலா் எஸ். முகம்மது பாரூக், செயலா் எஸ். காஜா முகைதீன், பொருளாளா் முகம்மது அப்துல் ரசாக் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவியா் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த கோப்பையை தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடாா் சங்கக் கல்லூரி வென்றது. வேளாண்மைத் துறைத் தலைவா் ஜலால் நன்றி கூறினாா்.