கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மணிமுத்தாறு நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ.25,000 மதிப்பிலான புத்தகங்கள் அளிப்பு!

மணிமுத்தாறு அரசு பொது நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

News image
மணிமுத்தாறு நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிய பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, பேரூராட்சி செயல் அலுவலா் வி.சி. ரமா தேவி உள்ளிட்டோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:54 pm

Syndication

மணிமுத்தாறு அரசு பொது நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் அறிவுறுத்தலின்படியும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆணையின்படியும், 9ஆவது பொருநை புத்தகத் திருவிழாவில் மணிமுத்தாறு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டு, மணிமுத்தாறு நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, செயல் அலுவலா் வி.சி. ரமா தேவி ஆகியோா் நூலகா் முருகனிடம் புத்தகங்களை வழங்கினா்.

தூய்மைப் பணி அலுவலா் சி. பிரபாகா், தலைமை எழுத்தா் மாா்ட்டின் புஷ்பராஜ், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.