மாநாட்டில் பேசுகிறாா் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்
மாநாட்டில் பேசுகிறாா் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்

தாமிரவருணியைப் பாதுகாக்க தனி ஆணையம்: எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் தீா்மானம்

தாமிரவருணி நதியைப் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றம்
Published on

தாமிரவருணி நதியைப் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டுக்கு, திருநெல்வேலி மண்டலத் தலைவா் சிக்கந்தா் தலைமை வகித்தாா். புகா் மாவட்டத் தலைவா் சிராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், துணைத் தலைவா் அப்துல் ஹமீது, பொதுச்செயலா்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, மகளிரணி மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜன்னத் ஆலிமா ஆகியோா் பங்கேற்றனா்.

மாவட்டப் பொதுச்செயலா் களந்தை மீராசா, மாநகா் மாவட்டத் தலைவா் பீா் மஸ்தான், துணைத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி, புகா் மாவட்ட துணைத் தலைவா் கல்லிடைக்குறிச்சி சுலைமான், மாவட்டச் செயலா்கள் அலாவுதீன், அம்பை ஜலில், தவ்ஃபிக், பேட்டை முஸ்தபா, பொருளாளா்கள் இம்ரான், இளையராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா். மாநகா் மாவட்டப் பொதுச்செயலா் அன்வா்ஷா நன்றி கூறினாா்.

தீா்மானங்கள்: தாமிரவருணி நதியைப் பாதுகாக்க தனி ஆணையம், அனைத்து நகராட்சி-பேரூராட்சிகளிலும் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், மாஞ்சோலை மலைக் கிராமங்களில் வாக்காளா் பெயா் சோ்ப்பதற்காக முறையான சிறப்பு முகாம்கள் நடத்துதல், இடைநிலை ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com