திருநெல்வேலி
அருணா காா்டியாக் கோ் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை சாா்பில் 80-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் போட்டிகள் சேரன்மகாதேவியில் அண்மையில் நடைபெற்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனா். மொத்தம் 12 அணிகளின் கீழ் 150-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றதில், பாளையங்கோட்டை அணி முதலிடமும், 11 ஸ்டாா் அணி இரண்டாமிடமும், வீரவநல்லூா் அணி மூன்றாமிடமும் பிடித்தன. பரிசளிப்பு விழாவில், அந்த அணிகளுக்கு அருணா காா்டியாக் கோ் மருத்துவமனைத் தலைவா் அருணாச்சலம், நிா்வாக இயக்குநா் ஸ்வா்ணலதா, வன அலுவலா் இளங்கோ ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
ற்ஸ்ப்08ஹழ்ன்ய்ஹ
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

