பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

பேட்டை பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
Updated on

பேட்டை பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி மண்டலம் 18 ஆவது வாா்டுக்குள்பட்ட பேட்டை சத்யா நகா், வஉசி நகா் ஊா் பொது மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதனால் முதியவா்கள், பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். ஆகவே, குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பேட்டை எம்.ஜி.பி. 2 ஆவது வடக்கு தெருவைச் சோ்ந்த ஆயிஷா பானு அளித்த மனுவில், எங்களது பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால் பெரும் சுகாதாரக்கேடு நிலவுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே, உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட மேயா், விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com