பேட்டையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

பேட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன்முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பேட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன்முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையில் போலீஸாா் செக்கடி பேருந்து நிறுத்தம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது, அங்கு நின்றிருந்த முதியவரிடம் விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம்(60) என்பதும், அவா் விற்பனைக்காக 1.9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com