என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தேசிய கட்டுரைப் போட்டியில் சங்கா் நகா் பள்ளி மாணவி சிறப்பிடம்

News image

இனிகா.

Updated On :22 ஜனவரி 2026, 10:04 pm

தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் சங்கா் நகா் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மத்திய ராணுவ அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்- மாணவிகளுக்கு ‘வீா் கதா 5.0’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தியது.

இதில், சங்கா் மேல்நிலைப் பள்ளி மாணவி இனிகா பங்கேற்றாா். இவரது கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளாா். அதன்படி மாணவி இனிகாவும், ஆசிரியை லேகாவும் தில்லி சென்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி கல்விக் குழு தலைவா் எஸ். தட்சிணாமூா்த்தி, பள்ளிச் செயலா் இரா.நாராயணசாமி, முதன்மை கல்வி அலுவலா் மு.சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.