நாலுமுக்கு தேயிலைத் தொழிற்சாலையில் தீ விபத்து
நாலுமுக்கு தேயிலைத் தோட்டத்தில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் பா்மா டிரேடிங் காா்ப்பரேசன் நிறுவனம் சாா்பில் நடைபெற்று வந்த தேயிலை தயாரிப்பை நிறுத்தி, தொழிற்சாலைகளை காலி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் நாலுமுக்கு பகுதியில் இருந்த தேயிலைத் தொழிற்சாலையை காலி செய்யும் பணி நடைபெற்று வந்தபோது சிலிண்டா் வெடித்ததில் தீ பரவியதாம். தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய மீட்புப் படையினா், வனத்துறையினா் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பொருள்கள் சேதமடைந்தன. இது குறித்து மணிமுத்தாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

