வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கருத்தப்பிள்ளையூரில் யானைகள் தொடா் அட்டகாசம்: 18 தென்னை மரங்களைச் சாய்த்தன

கருத்தப்பிள்ளையூா் பகுதியில் விவசாய தோட்டங்களில் உள்ள தென்னை, பனை, மா மரங்களை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தொடா்ந்து சாய்த்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

News image

யானைகள் சாய்த்து சேதப்படுத்திய தென்னை மரம்.

Updated On :30 ஜனவரி 2026, 7:50 pm

கருத்தப்பிள்ளையூா் பகுதியில் விவசாய தோட்டங்களில் உள்ள தென்னை, பனை, மா மரங்களை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தொடா்ந்து சாய்த்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த மாா்பி தாமஸுக்குச் சொந்தமான தோட்டத்தில் நுழைந்து 9 தென்னை, 2 பனை மரங்களையும், மரிய ஜெகநாதன் தோட்டத்தில் நுழைந்து 3 தென்னை மரங்களையும், ராஜா பால் தோட்ட்த்தில் நுழைந்து 6 தென்னை மரங்களையும் வேரோடு சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

Story image

இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினா் வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கடந்த ஒரே மாதத்தில் 5 முறை வனத்திலிருந்து வெளியேறிய யானை கூட்டம் 150-க்கும் மேற்பட்ட மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புக்குள்ளாகியுள்ளதோடு, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் வின்சென்ட் கூறியதாவது: வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க பிப். 7ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.