குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவா்களை வாழ்த்திப் பேசிய தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன்.
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவா்களை வாழ்த்திப் பேசிய தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன்.

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
Published on

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இப்பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், 12ஆம் வகுப்பு மாணவா்கள் மாரியப்பன், மதன், ரகுபாலன் ஆகியோா் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்று சான்றிதழ், கேடயம் பெற்று திரும்பினா். அவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அணிவகுப்புப் பயிற்சியாளராக கலந்துகொண்ட ஆங்கிலவழி ஆசிரியா் சந்தோஷ்குமாா் , நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா், பயிற்சியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

அம்மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் மு.சுந்தரம், தலைமையாசிரியா் வெங்கடசுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராஜேந்திர பாண்டியன், ஆசிரியா், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com