தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நான்குனேரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நான்குனேரியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நான்குனேரியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :30 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நான்குனேரியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் யமுனா, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை சா.முகமதுபாத்திமாஅனிஷா, நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் மீ.கணேஷ் சின்னதம்பி, கண்காணிப்பாளா் மு.அமுதவல்லி, சாலை ஆய்வாளா்கள் மா.பாண்டி, இ.மலையாண்டி, பா.எழில்அரசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசு பள்ளி மாணவியா், ஆசிரியைகள் சாலை விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டனா். பேரணி மறுகால்குறிச்சியில் தொடங்கி நான்குனேரி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. காவல்துறையினா் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்து வலியுறுத்திப் பேசினா்.