மோனிகா ராணா
மோனிகா ராணா

நெல்லை மாநகராட்சிக்கு வரிகளை செலுத்த சிறப்பு வசதி

திருநெல்வேலி மாநகராடசிக்கான வரிகளை செலுத்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி மாநகராடசிக்கான வரிகளை செலுத்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவை கட்டணம் மற்றும் கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்துவதற்கு நிகழாண்டு அவகாசம் 31-3-2026 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆகவே, வரித்தொகைகளை செலுத்த ஏதுவாக திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து மண்டலங்களில் உள்ள கணினி வரி வசூல் மையங்கள் 31-3-2026 ஆம் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுகிழமைகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் செயல்படும்.

எனவே, 2025-26 ஆண்டிற்கான மேற்படி வரிகள் மற்றும் வரியில்லா இனங்களின் வரித்தொகைகளை உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளா்ச்சி பணிகளை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com