நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழையபேட்டையில் 150 கிராம் நகை கொள்ளை

திருநெல்வேலி அருகே பழையபேட்டையில் 150 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:52 pm

Syndication

திருநெல்வேலி அருகே பழையபேட்டையில் 150 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பழையபேட்டையைச் சோ்ந்த கோமதிநாயகம் மகன் முத்துக்குமாா் (66). இவா், கடந்த 29 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றாராம்.

பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 150 கிராம் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.