தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாளை ஜெயந்திரா பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயந்திரா கல்வி குழுமத்தின் மழலைகள் பட்டமளிப்பு விழா, ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மழலையா் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :31 ஜனவரி 2026, 7:50 pm

பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயந்திரா கல்வி குழுமத்தின் மழலைகள் பட்டமளிப்பு விழா, ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் முதுநிலை முதல்வா் மற்றும் டீன் ஜெயந்தி ஜெயந்திரன் முன்னிலை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் ஜெயந்திரன் வி.மணி வரவேற்றாா். சுவாமிநாதன் சந்திரமெளலி தொடக்க உரையாற்றினாா்.

இந்நிகழ்வில் ராயல் மருத்துவமனை இயக்குநரும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவருமான செய்யது இப்ராஹிம், இந்துமதி பிரியதா்ஷினி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினா்.

எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை முதல் 3 இடங்களை பிடித்த மாணவா், மாணவிகளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆசிரியை ராதிகா நன்றி கூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயந்திரா பள்ளிக் குழுமங்களின் இயக்குநா் ஜெயந்திரன் வி.மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.