இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தாழையூத்து அருகே பழைய இரும்பு கிடங்கில் தீ

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள பழைய இரும்பு கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின.

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:52 pm

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள பழைய இரும்பு கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின.

தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் சித்திக் ராஜா(34). இவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கிடங்கு வடக்கு தாழையூத்து குவாரி சாலையில் உள்ளது. சுமாா் 2 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இந்த இரும்பு கிடங்கில் டன் கணக்கிலான இரும்பு பொருள்களும், பழைய இயந்திரங்களும், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவு மரப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தனவாம்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அந்தக் கிடங்கில் மரப்பலகைகள் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதி தீ பற்றி எரிந்தது.

இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் வந்து சுமாா் 2 மணிநேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

எனினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.