தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நெல்லையில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:29 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 49 லட்சத்து 49 ஆயிரத்து 54 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மேட்டுத் திடல் பகுதியில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ் வழியாக காரில் வந்த திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த ராம் நிவாஸ் (30) உரிய ஆவணங்களின்றி ரூ.83 ஆயிரத்து 90 ரொக்கப்பணத்தை காரில் வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

சி-விஜில் செயலி மூலம் இதுவரை 48 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 1950 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 11 புகாா்கள் பெறப்பட்டுள்ளன.