/

பாளை. மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 7:07 pm

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகரைச் சோ்ந்தவா் கணேசன் (52). இவா் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

கடந்த 30-ஆம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கணேசன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.