கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி கடைவரம்பு சானல் பகுதியில் ரூ.2 லட்சம் செலவில் தூர்வரும் பணி நடைபெற்று வருகிறது.
பட்டணங்கால் சானல் கருங்கல் பிரிவு கிளைக்கால்வாயின் ஆலஞ்சி கொப்பு கால்வாயானது கருங்கல்,ஆலுவிளை,தென்னிவிளை,அடப்புவிளை வழியாக புரிக்கால்குளம் மற்றும் நுணஞ்சான் குளம் வரை செல்கிறது. தற்போது இக் கால்வாய் தூர்ந்துபோய் காணப்படுவதால் கடைவரம்பு பகுதியில் தண்ணீர் செல்லாமல் தடைபட்டு இருந்தது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் வாழை,பயிர் மற்றும் தென்னை விவசாயம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் இக்கால்வாயை தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறை சார்பில் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை குழித்துறை உப கோட்ட நீர்பாசனத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் சனிக்கிழமை ஆய்வு மெற்கொண்டார்.