எஸ்எஸ்எல்சி தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளி தொடர்ந்து 15 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
நிகழாண்டில் இப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 195 மாணவர், மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 20 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 78 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 135 பேர் 450 க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 21 மாணவர்களும், அறிவியலில் 13 பேரும், சமூக அறிவியலில் 56 பேரும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 2 பேரும், ஆங்கிலத்தில் 4 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற இம்மாணவர்களை பள்ளித் தாளாளர் தாமஸ்பௌவத்துபறம்பில், முதல்வர் லிஸ்பெத், துணை முதல்வர்கள் சனில்ஜான்,பிரேம்கலா,ஒருங்கிணைப்பாளர் ராஜய்யன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சேவியர்சந்திரபோஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.