தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜாண்விஜயன் தலைமை வகித்தார். ஆசிரியர் டானியல் பொன்னப்பன், ஆசிரியை ஜாஸ்பின் ஜெபா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு விதை நேர்த்தி, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல், தென்னை டானிக் போன்ற இயற்கை உரங்களை செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியை கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்கள் பெருமாள், கவிகுமார், அபினேஷ், ராமகிருஷ்ணா, ரமேஷ்கண்ணா, விவேக், அருண்பாண்டியன், விஷ்ணு, வேங்கடரமணன் ஆகியோர் நடத்தினர்.