செம்பெருத்திவிளை நியாயவிலை கடை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலை வட்டார குழு சார்பில் செம்பெருத்திவிளை நியாயவிலைகடை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக் குழு உறுப்பினர் சரோஜா தலைமை வகித்தார். போராட்டத்தை வட்டாரச் செயலர் குமாரி சுனந்தா தொடங்கிவைத்தார். குழித்துறை நகராட்சி முன்னாள் தலைவர் ஏ.எம்.வி டெல்பின், வட்டார துணைத் தலைவர் சுஜா ஜாஸ்மின் , விவசாயசங்க தலைவர் மரியதாஸ் உள்ளிட்டோர் பேசினர். இதில் உஷா, ராஜகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.