இந்திய குடியரசுக் கட்சி சார்பில் குலசேகரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்டத் தலைவர் பி. சிம்சன், செயலர் ரவீந்திரன், பொருளாளர் குசேலன், நிர்வாகிகள் நல்லதம்பி, மனோதாஸ், ஏசுரத்தினம், அர்ஜூனன், பிரபு, சுந்தர், அனீஷ், ராதாகிருஷ்ணன், சுலின், பால்ராஜ், ரஞ்சித், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.