அகில இந்தியதொழிலாளர் சங்கத்தின் ராஜாக்கங்கலம் ஒன்றிய சிறப்பு பேரவைக் கூட்டம் ஈத்தாமொழியில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கப்பன் தலைமை வகித்தார். உமையொருபாகன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் தொடக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.சாகுல்ஹமீது வேலையறிக்கையை முன்வைத்து பேசினார்.
பின்னர் புதிய ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றியக் குழுத் தேர்வு செய்யப்பட்டது. தலைவராக திருச்சிற்றம்பலம், உதவித் தலைவர்களாக ஆஸ்பின், மணிமேகலை, ஜெபமணி, செயலாளராக எம்.சாகுல்ஹமீது, துணைச் செயலாளர்களாக தங்கப்பன், ஆனந்தி, அனுசியா, பொருளாளராக மிக்கேல் நாயகி, உறுப்பினர்களாக ஜெயா, அன்னக்கிளி, உமாபதி, குயின்மேரி, முத்துசெல்வம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மரியபுஷ்பம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அம்முக்குட்டி, வனஜா, மரியஆபரணம், தங்கபாய், ராஜேஸ்வரிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஓய்வூதியம் கோரி, இம்மாதம் 27 ஆம் தேதி ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மனுகொடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.