குழித்துறையில் மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து, நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி அலெக்சாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தரைவழி இணைப்புகளைப் பெற்று கட்டண பாக்கி காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளவர்களுக்கு , விதிப்படியான தள்ளுபடியை பெற்றுக்கொண்டு, பாக்கியை தீர்வு செய்வதற்கும், தேவையானால் மறு இணைப்பு பெற்றுக்கொள்ளவும் மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) குழித்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 20) காலை 10.30 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.
எனவே, அருமனை, செருவலூர், கடையாலுமூடு, கொல்லங்கோடு, குலசேகரம், குழித்துறை, மணக்காவிளை, மூவாற்றுகோணம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், பத்துகாணி, திருவட்டாறு, லோயர் கோதையார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.