தூத்தூர் புனித யூதா கல்லூரியில், இலக்கியமும் ஊடகமும் என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
முதுகலை மற்றும் ஆங்கில ஆராய்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரித் தலைவர் சில்வெஸ்டர் மொறாய்ஸ் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் லூசியான் தாமஸ் தொடங்கிவைத்தார். சுயநிதி இயக்குநர் ஆன்டணி வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் வில்சன் வரவேற்றார். பேராசிரியை ராஜேஸ்வரி தாமஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியர் சேவியர்தாஸ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி முதுகலை ஆங்கில பேராசிரியர்கள் ரெஜின்சாம், ஷிபு ஆகியோர் செய்திருந்தனர்.