கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் கொச்சுவேலியில் இருந்து இயக்கப்படுவதைக் கண்டித்து, நாகர்கோவிலில் அதிமுகவினர் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து தினமும் சென்னைக்கு செல்லும் அதிவிரைவு ரயிலின் பெட்டிகளை கொண்டு கடந்த 15 ஆம் தேதியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு புதிதாக பயணிகள் ரயிலாக இயக்கப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி விரைவு ரயில் தினமும் தாமதமாவதை கண்டித்து நாகர்கோவிலில் அதிமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்ற கொல்லம் பயணிகள் ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.