கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் மின்னல் பாய்ந்து வீடு மற்றும் 50-க்கும் மேற்பட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மத்திகோடு, மாத்திரவிளை, காட்டுகுளம், மூவர்புரம், அரித்திரானவிளை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், மின்மோட்டார், டிவி, மின்விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
மேலும், மத்திகோடு பகுதியைச் சேர்ந்த ஜான்போஸ்கோ(45) என்பவரது வீட்டில் மின்னல் பாய்ந்து, வீட்டின் முன் பகுதியில் கீரல் விழுந்து சேதமடைந்தது.