கன்னியாகுமரி
அருமனையில் ஜனதா தளம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அருமனையில் ஜனதா தளம் சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அருமனையில் ஜனதா தளம் சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேல்புறம் வட்டார ஜனதா தளம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் ஜி. சுமித்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் டி. அருள்ராஜ், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் டி. ஜான் கிறிஸ்டோபர், மஞ்சாலுமூடு ஊராட்சி முன்னாள் தலைவர் எம். செல்வன், அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவர் யு. தியாகராஜன், தக்கலை வட்டாரத் தலைவர் ஜே. அருள்தாஸ், கிள்ளியூர் வட்டாரத் தலைவர் எஸ். ராஜேசேகரன், அருமனை நகரத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். இதில், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன ஓட்டுநர் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.