கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தில் அமாவாசையொட்டி ஞாயிற்றுக்கிழமை மகா சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.
நவக்கிரக தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் நடைபெற்ற இக்ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு சங்கல்பம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர் செய்திருந்தனர்.