கன்னியாகுமரி
நாகர்கோவிலில் அரசு மருத்துவர்கள் மனிதச் சங்கிலி
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார். சங்கச் செயலர் சுரேஷ் பாலன், மாநில பிரதிநிதிகள் முரளிதரன், முத்துகுமார், பேராசிரியர் குழுத் தலைவர் பிரவின் மற்றும் திரளான மருத்துவர்கள் மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.