கன்னியாகுமரி புனித கலாசன்ஸ் பள்ளியில் இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இயற்கை உணவின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட இப்பேரணியை பள்ளி வளாகத்தில் இருந்து தாளாளர் சுனில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் ஜீன்ஸ் ஜோசப், அருள்பணி ஜோஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், 3 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்று, கன்னியாகுமரி பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இயற்கை உணவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.