தாமிரவருணி ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, கல்லிடைக்குறிச்சி தாமிரவருணியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
அக். 11 முதல் 22 வரை தாமிரவருணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா நடைபெறவுள்ளது. இதையடுத்து தாமிரவருணி ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றின் பிருகு தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தாமிரபரணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து தாமிரவருணி நதிக்கு மலர் தூவி ஆரத்தி காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பத்மநாபன், கோமதி அன்னபூரணி, ராஜலெட்சுமி, ராமகிருஷ்ணன், ராகவன், பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.