தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் லீமாரோஸ்லி தலைமை வகித்தார். தாளாளர் நிக்கோலா ராணி முன்னிலை வகித்தார்.
வட்டார சுகாதார மேலாளர் இந்திரன் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்தார். சுகாதார ஆய்வாளர் ராமதாஸ் டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசி பேரணியை தொடங்கிவைத்தார். மாணவர், மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி தக்கலை பகுதிகளில் கோஷமிட்டவாறு, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்.