நாகர்கோவிலில் சித்திரை திருநாள் விழா

கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவை சார்பில் சித்திரை திருநாள் விழா நாகர்கோவில் வடசேரியில் நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவை சார்பில் சித்திரை திருநாள் விழா நாகர்கோவில் வடசேரியில் நடைபெற்றது. 
பேரவை மாவட்டத் தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தார். செயலர் ஆர்.ரகுராம் வரவேற்றார். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் டோக்ரா ஆகியோர் அருட்ஜோதி ஏற்றி வைத்து விழாவை தொடங்கிவைத்தனர். கோபூஜையை பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரிச் செயலர் சி.ராஜன் தொடங்கிவைத்தார். பி.அங்ரி, லதா மாதாஜி, சிதம்பரம் ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதினர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் எஸ்.ஜீவானந்தம்,  குளச்சல் ஜான்போஸ்கோ,  குமரி மாவட்ட  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் ஜெயாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரவை இணைச் செயலர் பி.மகேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com