அரசுப் பேருந்து- பைக்  மோதல்: இருவர் சாவு

கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து  மீது பைக் மோதிய விபத்தில் கூலித்தொழிலாழிகள் இருவர் உயிரிழந்தனர்.

கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து  மீது பைக் மோதிய விபத்தில் கூலித்தொழிலாழிகள் இருவர் உயிரிழந்தனர்.
 தெருவுக்கடை காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் பாபுஆன்றனிராஜ்(29). ,அதேபகுதியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் அபின்(19) ,  இருவரும் கூலித்தொழிலாளிகள். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பணிமுடிந்து கருங்கல்லில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். பைக்கை பாபு ஆன்றனிராஜ் ஒட்டிவந்தார். பாலூர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த  அரசுப் பேருந்து  மீது பைக் மோதியதில்,   இருவரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.
  இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து,  சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com