குமாரகோவில் நூருல் இஸ்லாம் கல்வி நிறுவன பணியாளர்கள் சங்க ஆண்டுவிழா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத்கான் , இணைதுணை வேந்தர் சந்திரசேகர், பதிவாளர் திருமால்வளவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகளை வேந்தர் வழங்கினார். பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு சங்கத்தின் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. நிகழாண்டு முதல் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கூட்டு காப்பீட்டு திட்டத்தை நிர்வாகம் ஏற்று எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. தலைவர் கே.ஏ.ஜனார்த்தனன் வரவேற்றார். செயலர் இளங்குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜெயன் நன்றி கூறினார்.