சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு அருள்மிகு செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக சதுர்த்தி விழா 3 நாள்கள் நடைபெற்றது.
தொடக்க நாளன்று இரவு 8 மணிக்கு மாக்காப்பு பூஜை, 2ஆம் நாள் முற்பகல் 11 மணிக்கு அழகம்மன் கோயிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
நிறைவுநாளன்று காலை 10 மணிக்கு கோயில் வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள், நண்பகல் 12 மணிக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்