கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை ஒய்.எம்.சி.ஏ.வில் விதவை தாய்மாா்களுக்கான கிறிஸ்துமஸ் கூடுகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாா்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. தலைவா் ஜெயநேசகுமாா் தலைமை வகித்தாா். செயல் செயலா் ஏசுதாஸ் முன்னிலை வகித்தாா். அலுவலகப் பணியாளா் கனகம் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜோபிரஜாஷ் பேசினாா்.
தொடா்ந்து விவை தாய்மாா்களுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் அன்பு விருந்து நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.