மார்த்தாண்டத்தில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் (பால்மா) மக்கள் அமைப்பு நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு அமைப்பின் பகுதி ஒருங்கிணைப்பாளர் கே. சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். டி. பிலோமினா வரவேற்றார். புதிய நிர்வாகிகளைஅமைப்பின் இணை இயக்குநர் ஜெ.டி. ஜாண் ஜெயராஜ்பொறுப்பில் அமர்த்தினார். புதிய நிர்வாகிகளான இயக்கச் செயலர் எஸ். சத்தியமூர்த்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். விக்டோரியாள், பேரவைத் தலைவர் எஸ். பொன்னப்பன், செயலர் எம். ஷீபா, கூட்டமைப்புத் தலைவர் செல்வம், செயலர் பி. தெரசம்மாள், பொருளாளர் கே.ஏ. செல்வி, மேரி ரெத்தினபாய் உள்ளிட்டோர் ஏற்புரையாற்றினர். பகுதி ஒருங்கிணைப்பாளர் ஆர். நெல்சன் நன்றி கூறினார்.