குழித்துறை பழைய பாலத்தை சீரமைத்து போக்குவரத்து வசதி செய்யாத தேசிய நெடுஞ்சாலைத்துறையையும், தமிழக அரசையும் கண்டித்து தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் பழவார் தங்கப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அமைப்பின் நிர்வாகிகள் கொடுங்குளம் ராஜேந்திரன், சுந்தரதாஸ் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர் ஜெயகுமார், மகளிர் அமைப்பு நிர்வாகிகள் சாந்தா, சாவித்திரி, பேபி, மஞ்சுளா, விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.