வெள்ளிசந்தை அருகே மணவிளை அருணைச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் "குறைந்த செலவில் கட்டுமானங்கள்' எனும் தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.
இப்பயிலரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் ஜோசப்ஜவஹர் தொடங்கி வைத்தார். நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தின் கட்டுமானத்துறை தலைவர் பிரகாஷ் அருள் ஜோஸ், இன்றைய சூழலில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு மாற்றாக வேறு எந்தெந்த பொருள்களை பயன்படுத்தி கட்டுமான செலவை குறைப்பது, புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் கட்டுமான செலவு குறைவு போன்றவை குறித்து மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
இதில், கல்லூரியின் கட்டுமானத்துறை தலைவர், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.