குமரி மாவட்ட தமிழாலயம் அமைப்பின் சார்பில், "எழுக நீ தமிழா' எனும் தலைப்பில் கருத்தரங்கு பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது.
காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் தலைமை வகித்தார். அமைப்பின் இயக்குநர் புலவர் கு. பச்சைமால் அறிமுக உரையாற்றினார்.
செயலர் தெய்வநாயகப்பெருமாள், கல்லூரித் தலைவர் காமராஜ், தமிழ்த்துறைத் தலைவர் வைகுண்டமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை பங்கேற்றுப் பேசினார். முதல்வர் பொன்.முருகன் வாழ்த்திப் பேசினார்.
தமிழின் தாழ்வுறும் நிலையைப் போக்க அரசும், கல்வியாளர்களும் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பேராசிரியர் நாராயணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.