நாகர்கோவிலில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

நாகர்கோவில் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

நாகர்கோவில் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியம் மனைவி பத்மா(44).  பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு, பத்மா திங்கள்கிழமை தனது வீட்டின் முதல் மாடியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து நேசமணிநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com