நாகர்கோவிலில் நடைபெற்ற மக்கள் நீதி மன்ற முகாமில் 1963 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீர்வு காணப்பட்டது.
நாகர்கோவிலில் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்ற முகாமிற்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கோமதி நாயகம் தலைமை வகித்தார். முகாமில், 11,600 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இதில்,1963 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 6.74 கோடி இழப்புத் தொகை வழங்கப்பட்டது. இந்த முகாமில், வாகன விபத்து, காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், மக்கள் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.