நாகர்கோவில் குறளகம் சார்பில் திருக்குறள் சிந்தனை முற்றக் கூட்டம் கோட்டாறு தமிழ் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு இந்துக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நாகலிங்கம் தலைமை வகித்தார். பழவிளை காமராஜ் கல்வியியல் கல்லூரி முதல்வர் குமரேசன், திருக்குறளில் தெரிந்து செயல்வகை எனும் அதிகாரம் குறித்துப் பேசினார். யோகிராம்சுரத்குமார் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார்.
அல்போன்சா பள்ளியின் ஆசிரியர் கார்மல்ராய் கவிஞர் தமிழ்க்குழவி எழுதிய அல்போன்சா பிள்ளைத்தமிழ் நூல் குறித்து பேசினார். கூட்டத்தில் சிவ.தங்கப்பன் கவிதை வாசித்தார். இதில், கவிமணி நற்பணி மன்றத் தலைவர் புலவர் சிவதாணு, தமிழாலயம் தெய்வநாயக பெருமாள்,
திருக்குறள் ஆய்வு மைய குமரிச்செல்வன், பிரம்மஞான சங்கத்தின் பொன்.மகாதேவன், எழுத்தாளர்கள் பட்டத்தி மைந்தன், சரலூர் ஜெகன், ஜூடி சுந்தர், ஒளிவெள்ளம் பிதலிஸ், குறளக மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
குறளகம் நிறுவனர் தமிழ்க்குழவி வரவேற்றார். நிகழ்ச்சியினை கவிஞர் தங்கத்துமிலன் தொகுத்து வழங்கினார்.